Friday 24 December 2010

மன அமைதிக்கு நல்ல விதமான கற்பனை

நம்முடைய மூளைக்கு உண்மையையும் கற்பனையையும் பிரித்து பார்க்க தெரியாது. இரண்டையும் ஒன்றாகத்தான் எடுத்துக்கொள்ளும். அதாவது நம்மை யாராவது உண்மையாகவே பாராட்டினாலோ அல்லது புகழ்ந்தாலோ நாம் சந்தோஷ படுவோம். அதுபோல் நாம் கற்பனை செய்தாலும் சந்தோசம் படுவோம். அதனால் நல்ல விதமாகவே கற்பனை செய்தால் நம் மூளையானது அதை நோக்கி சென்று நம் நினைத்ததை அடைய வைக்கும். நீங்கள் நல்ல திறமைசாலியாக பலர் முன் பரிசு வாங்க வேண்டுமென்றோ அல்லது படிக்கும் மாணவன் படிப்பில் சிறந்து வர வேண்டும் என்றோ அல்லது நம் உறவினர்கள் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றோ உங்களின் தேவை கேற்ப கற்பனை செய்தால் அது மட்டுமே நடக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது. அதேபோல் தவறானதை நினைத்தோம் என்றால் அதுவும் நடக்கும். ஏனென்றால் நாம் நினைப்பதை மூளை அப்படியே ஏற்று அதற்க்கு தகுந்தபடி நம்மை வூக்குவிக்கிறது. அப்துல் கலாம் அவர்கள் அதனால் தான் கனவு காணுங்கள் என்று அடிக்கடி இளைநர்களிடம் சொல்கிறார். அது நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மட்டும் அல்ல நம் மன அமைதிக்கும் சந்தோசத்திற்கும் நிச்சயமாக உதவுகிறது. கேளிக்கை நிகழ்வுகளையும், இனிமையான ஜோக்ஸ்களையும் நாமே புதிதாக யோசித்து பார்த்தோம் என்றால் நம் மனதில் ஒருவித அமைதியை உணரலாம். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

1 comment:

  1. அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெருங்கருணை !! அருட்பெருஞ்ஜோதி !!
    வணக்கம், உங்களது கட்டுரை மிக்க பயனுள்ளது. நன்றி ...தொடருங்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete