Saturday 3 March 2018

குழந்தைகளை கையாளுவது எப்படி

உலகமே வியந்து போகும் அளவிற்கு அற்புதம் நிறைந்த குழந்தைகளை கையாளுவது என்பது தனித்திறமை மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கு அது சவாலாகவே இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் முடிந்தவரை இனிமையாகவே கையாளுகிறாராகள். மேலும் சிலர் எப்படி சிறப்பாக குழந்தைகளை வளர்ப்பது என்று தேடி படித்த வண்ணம் இருக்கிறார்கள். • குழந்தைகளின் வெற்றிக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் குழந்தைகளை பொறுத்தவரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வில் வெற்றிகளும், சாதனைகளும் நிச்சயம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவு பெரும் பங்கு வகிப்பதை அனைவரும் அறிவோம். அறிந்த விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து எளிதாக அமைகிறது. என் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்வார் என்று மனதில் திடமாக நினைக்கும்பொழுது அதற்கான வழிகளும் எளிதாக்கப்படுகிறது. சமச்சீராக சாப்பிடும் பொழுது மட்டும் தான் அனைத்து வித சத்துக்களும் குழந்தைகளுக்கு போய் சேருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாளில், ஒரு உணவை ஒரு முறை சாப்பிட்டால் போதும், அடுத்த நேரத்திற்கு வேறு உணவை சாப்பிடுதல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வகையான பழங்கள், அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வகை. அதேபோல் மூன்றிலிருந்து நான்கு வகையான காய்கறிகள், கீரைகள், பருப்பு மற்றும் தானியங்கள், உலர்ந்த பழங்கள், ஒரே ஒரு டம்ளர் பால் என்று அனைத்து வித இயற்கை உணவுகளும், ஒரே ஒரு முறை என்ற விகிதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்தி விட்டீர்கள் என்றால் குழந்தைகள் முழுமையான ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி பெற்றோர்களுக்கு பெருமிதத்தை அதிகப்படுத்தும். • தூக்கத்தின் முக்கியம் குழந்தைகளின் தூக்கமும் அவர்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும். குழந்தைகள் நேரத்தில் தூங்கி, நேரத்தில் எழுந்திருப்பது, நீங்கள் எழுப்பாமல் என்றாள் அது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ளும் பொழுது, குழந்தைகளிடம் அந்த பழக்கத்தை கொண்டு வருவது எளிதாக இருக்கும். எப்படி என்றால் நாம் மனதில் எதை கொண்டுவருகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் உடலும் மனமும் வேலை செய்யும். நல்ல தூக்கம், நேரத்தில் தூங்குதல் பற்றி ஆழமான அறிவு இருக்கும் ஒருவரால், குழந்தைகளுக்கு அந்த அறிவை கொண்டு செல்வது இயல்பானதாகவே இருக்கும். குழந்தைகள் அழகானவர்கள் மட்டும் இல்லை அறிவானவர்களும் கூட. நாம் சொல்லும் வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் எளிதாக புரிந்துகொள்பவர்கள். • உணவும் ஆரோக்கியமும் எது பெற்றோர்களுக்கு தேவையோ, குழந்தைகள் என்ன செய்தால் பிடிக்குமோ அதைபற்றிய சிந்தனைகளை உருவாக்கிவிட்டால் அது மட்டும் தான் நடக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நாம் அக்கறை காட்டுகிறோம் என்றால் அதற்கான வேலைகளை செய்வதும் நமக்கு பிடித்தே இருக்கும். குறிப்பாக பழங்கள் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பழங்களை எடுத்து, கழுவி, அறுத்து, பரிமாற ஆகும் நேரம் நம் குழந்தையின் ஆரோக்கியத்திற்க்குத்தான் என்று நினைக்கும் பொழுது என்னதான் நம் கண் முன்னே பிஸ்கட் போன்ற பேக்கட்டில் அடைத்த ஆரோக்கிய குறைபாடுகளை உருவாக்கும் பொருட்கள் இருந்தாலும், அதை நாம் தவிர்ப்பது என்பது நம் பழக்கமாகவே மாறிவிடும். ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் உடல் உபாதைகள் இயற்கையே. அந்த நேரத்தில் பெற்றோர்களின் பொறுமை மற்றும் நல்ல எண்ணங்கள் மிக முக்கியம் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உடல் உபாதைகள் நேரும்பொழுது இதனால் நம் குழந்தையின் உடல் மேலும் சுத்தமாகி கொண்டிருக்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்றும், இதனால் நல்லதுதான் நடக்கும் என்ற நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். மருந்துகள் அதிகம் தவிர்த்து இயற்கை முறையில் குணப்படுத்த நினைத்தீர்கள் என்றால் அது குழந்தைகளின் பிற்கால வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுப்பதோடு அவர்கள் ஆரோக்கியமானவர்களாகவே இருக்கவும் செய்கிறார்கள். இப்படியாக ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்கிய உங்களுக்கு மகிழ்ச்சியான குழந்தைகளை உருவாக்குவதும் முடிந்த ஒன்றே. • குழந்தைகளின் மகிழ்ச்சி பெற்றோர்களின் எண்ணம் அழுத்தமாகவும், ஆழமாகவும் எதை நினைக்கிறதோ, நம்புகிறதோ அதன் மூலமாக உருவாகும் செயல்கள் மற்றும் நடத்தைகளுக்கு ஆற்றலும், சக்தியும் மிக மிக அதிகம். மகிழ்ச்சியான குழந்தைகளால் பல வெற்றிகளை கொண்டாட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் பெற்றோர்கள் நினைத்தால் குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைக்க முடியும் என்பதும் உண்மையே. குழந்தைகளை முத்தமிடுவதும், கட்டியணைப்பதும், பாராட்டி பேசுவதும், நல்ல விதமாக நேரத்தை குழந்தைகளிடம் உபயோகிப்பதும், அவர்கள் என்ன செய்தால் பெற்றோர்களுக்கு பிடிக்குமோ அதைப்பற்றிய உரையாடலை அதிகப்படுத்துவதும், சிரிப்பை தூண்டிவிடும் விளையாட்டுகளை அதிகமாக விளையாடுவதும், அவர்களுக்கு பிடித்த விஷயத்திற்கு நாம் வேலை செய்து கொடுப்பதும், அவர்கள் எது நினைத்தாலும் அது நடப்பதற்க்கு நாம் உதவி செய்வதும், அவர்கள் எந்த வேலை செய்தாலும் நாம் உதவுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கி விட்டாலும், அவர்களின் மன நிலையில் எப்பொழுதும் ஒருவித மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். இம்மாதிரியான மகிழ்ச்சி உணர்வுகள் இனிமையான நினைவுகளாக மாறும். இனிமையான நினைவுகளை அதிகம் உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அது குழந்தைகளின் வாழ்க்கையில் மன மகிழ்ச்சி, நிறைவு, புதுமை, சாதனை என பெரிய பெரிய முன்னேற்றங்கள் நிலைத்து நிற்க காரணம் ஆகிவிடும். • பெற்றோர்களின் அரவணைப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கு பிடிக்காத காரியங்களை செய்து விட்டால் அதைப்பற்றி பேசாமலும், கண்டு கொள்ளாமலும், விட்டுவிட்டால் அந்த குழந்தை அந்த காரியத்தை திரும்ப செய்வது குறையும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டால் அதை பாரத்துவதும், அதைப்பற்றி அதிகமாக பேசுவதும், குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கத்தை அதிகப்படுத்தும் என்பதும் உண்மையானவையே. குழந்தைகளுக்கு நல்ல விதமான உணர்வுகளை அதிகபடுத்தி விட்டோம் என்றால் அவர்களின் உடம்பில் நிணநீர் ஓட்டம் சமமாக இருக்கும். அதனால் அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். மகிழ்ச்சியான குழந்தைகள் தன்னம்பிக்கையோடும், சுய மதிப்போடும், படிப்பில் ஈடுபாடுடனும், தன் வேலைகளை செய்யவும், பொறுப்புணர்வோடும், சுயமாக கற்கும் திறன் கொண்டவர்களாகவும், படிப்பில் முழுமையன கவனத்தோடும், இருப்பார்கள் என்பதெல்லாம் உளவியல் ஆராய்ச்சிகளில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. • முடிவாக குழந்தைகளை கையாளும் பெற்றோர்கள் உணவில் கவனத்தையும், , நல்ல தூக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், அரவணைப்பயும், நல்ல வார்த்தைகளை அதிகம் பகிர்ந்தும் செயல்படும் பொழுது குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உருவாக்கிறார்கள். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். Mehar M.Sc., Ph.D., (Psychology). Happiness Coach & Motivational Speaker VISUAMIND – School for Happiness 8870209982 meharun@gmail.com

Monday 19 February 2018

குழந்தைகளிடம் மன அமைதி ஏற்பட பெற்றோர்களின் பங்கு

நாம் அனைவருக்கும் நம் குழந்தைகளை பற்றி பெரிய கனவுகள் உண்டு. அந்த கனவுகள் நிறைவேறும் என்று எந்த தருணத்தில் நீங்கள் நம்புகிறீர்களோ அந்த நேரத்தில் இருந்து நீங்கள் நினைத்தது நடக்க ஆரம்பிக்கிறது. குழந்தைகள் மன அமைதியுடனும், மகிழ்வுடனும் இருக்கிறார்கள் என்றால் எதுவும் சாத்தியம். குழந்தைகளை எப்படி மன அமைதியுடனும் மகிழ்வுடனும் வைத்து கொள்ளலாம் யென்றால், அவர்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யும் செயல்களை பற்றி பாராட்டி பேசுவதும் அவர்களை பெருமை படுத்துவதும், குழந்தைகளை மகிழ்வுடன் வைத்து கொள்ளும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் எவ்வளவுக்கு எவ்வளவு குழந்தைகள் சிரிக்கிறார்களோ அவ்வளவுக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் அவர்களிடம் ஏற்படும். குழந்தைகள் உங்களுக்கு பிடிக்காத செயல்களை செய்துவிட்டால் அதை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் மாற்றி விட வேண்டும். அப்பொழுது அவர்களிடம் நல்லாவிதமான உடல் மாற்றம் ஏற்படும். இவை யெல்லாம் குழந்தைகளிடம் அவர்கள் செய்யும் அனைத்தும் சரியே யென்ற எண்ணத்தை அதிகபடுத்தும். நாம் செய்வது சரி யென்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே சுய மதிப்புடனும், தன்னம்பிக்கையுடனும், மகிழ்வுடனும், வெற்றிகளுடனும் இருப்பார்கள் என்று மன நல ஆராய்ச்சிகள் கூறுகின்றது. Dr. Mehar Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness

Friday 5 August 2011

நமக்குள் பார்ப்பதும், நம்மை நோக்கி பயணிப்பதும் மன அமைதியை அதிகபடுத்தும்

யாரவது உங்களை திட்டிவிட்டாலோ, மனம் நோகும்படி நடந்துவிட்டாலோ, உடனே உங்களின் மனம் வருத்தப்படுவதோடு மீண்டும் அவர்களை எதாவது செய்யவேண்டும் என யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது மன அமைதி என்பதை தேடினாலும் உணர முடியாது. அம்மாதிரியான சூழல்களில் சிறிது நேரம் மனதை அமைதிபடுத்த முயலுங்கள். கண்டிப்பாக முடியும் உங்களால், பின்பு நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சு பயிற்சி செய்யும்போது அப்படியே அதில் கவனம் செலுத்தி உங்களுக்குள் பார்க்க முயற்சி செய்யுங்கள். நம்மை நாமே உள்நோக்கி பார்க்கும் போது ஒருவித அமைதியை உணர முடியும்.

அதற்குத்தான் சொல்லுவார்கள் prayer , தியானம், relaxation போன்றவற்றை செய்வது நல்லது என்று. இவை எல்லாம் நம்மை அமைதிபடுத்தும் செயல்கள். இதை நாம் செய்யும் போது நாம் நமக்குள் பயணம் செய்ய ஆரம்பிப்போம். இம்மாதிரி செய்யும் போது நம்மை பற்றிய தெளிவும் அறிவும் நமக்கு அதிகமாகும். இத்தெளிவு மன நிறைவோடு கூடிய அமைதியை கொடுக்கும். நமக்கு உள்ளே நாம் கவனிக்கும் பொழுது நம்முடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கற்றுகொள்ள ஆரம்பிப்போம். அதனால் தேவையில்லாத சிந்தனைகள் அகற்றப்பட்டு நமக்கு என்னதேவை, எதை நோக்கி செல்ல வேண்டும் எனபதில் ஒரு உணர்தல் ஏற்படும் . உங்களையே நீங்கள் கவனிப்பதால் வரும் அத்தெளிவு உங்களையே உங்களுக்கு பிடிக்கவும் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தவும் உங்களை ஊக்குவிக்கும். இதல்லாம் ஒருசேர நடக்கும் போது வாழ்வில் ஒரு பிட்டிப்பும் சந்தோசமும் அதிகமாக மன அமைதி உங்களுக்கே சொந்தமாகும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

Monday 6 June 2011

சலனமில்லாத மனது அதில் இருக்கும் அமைதி

நாம் ஒவருவரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் என்றாவது ஒரு தடவை ஒரு வித அமைதி நம் மனதில் இருப்பதை உணர்வோம். அந்த அமைதி க்கு என்று சில காரணங்கள் இருக்கும், அதை கண்டுபிடித்தால் நாம் என்றுமே மன அமைதி மற்றும் மன நிறைவுடன் இருப்பதற்கான வழியை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியை கற்று கொடுப்பதில் ஆர்வம் உடையவர். அவர் சொல்வார், என் சந்தோசமும் மன அமைதியும் அவர்களுக்கு கற்றுகொடுக்கும் போது என்னால் உணரமுடிகிறது.

இப்படியாக நமக்கு எதை செய்தால் சந்தோசம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தல் முக்கியம்.

உங்களை உங்களுக்கு பிடிக்க வேண்டும், அப்பொழுது நம்மால் என்ன முடியுமோ அது நம்மை எவளவு சந்தோசம் படுத்துமோ என்று தெரிந்து அதில் ஈடுபட்டால் மன அமைதி யும் சந்தோசமும் நம்முடன் என்றுமே இருப்பதாய் உணரலாம்

Friday 14 January 2011

புதுமை படைப்பதும் மனஅமைதியும்

ஓவருவருக்கும் அவர்களுக்கு என்று புதுமை படைக்கும் ஆற்றல் உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்த பழகி இருக்கிறோமோ அதை பொறுத்து நம் வாழ்வில் சந்தோசமும் மனஅமைதியும் ஏற்படும். புதுமை படைப்பது அதாவது creativity என்பது ஆங்கிலத்தில், நம் பேச்சில் இருந்து, நாம் செய்யும் ஓவரு செயல்களிலும் நம்முடைய creative ஆற்றலை பயன்படுத்தி அங்கே ஒரு புது தன்மையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தும் பொழுது நமக்கு என்று ஒரு அங்கீகாரத்துடன் ஒருவித சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். . இப்படியாக ஓவரு நாளிலும், பல இடங்களில், அவரவருக்கே உரித்தான புதுமையான சிந்தனைகளை செயல்படுத்த ஆரம்பித்தால், ஒருவித தன்னம்பிக்கையுடன் கூடிய மனஅமைதியை உணர முடியம்.

புதுமையை படைப்பது என்பது ஒரு தனித்திறமை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஓவருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஆனால் புதுமை படைப்பது என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு திறமை, அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியின் மற்றும் பழக்கத்தின் அடிப்படையில் அதை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் வளர்த்து கொண்டபின் அது ஒரு தனித்திறமையாக கருதப்படிகிறது.

எடுத்துக்காட்டாக, எனது நண்பர் ஒருவர் அவருக்கு வரும் forward message யை, அப்படியே திருப்பி புதுமையாக சிலதை சேர்த்து அனுப்பியவருக்கே அனுப்புவார். இதுவும் கூட ஒருவித creativity தான். இப்படியாக நம் வாழ்வில், பல சந்தோசங்களை நாம் அனுபவிப்பதோடு, நம்முடன் சேர்ந்தோரையும், நம்முடைய புதுமை படைக்கும் திறமையினால், அவர்களை சந்தோசபடுத்தி ஒருவித மனஅமைதியை அவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.

பேச்சில், எழுத்தில், நடவடிக்கையில், செயல்களில், மற்றவர்களுடன் உறவை மேம்படுத்துவதில், நம் வாழ்க்கை முன்னேற்றத்தில், நம் சமூகத்தை வழிநடத்துவதில், என்று பல இடங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி, பழையன இல்லாமல், புதுமையான கண்ணோட்டத்தில் உலகை பார்வையிட நமக்கே உரித்தான புதுமை படைக்கும் ஆற்றலை வளர்ப்போம், மனித வாழ்வில் புதுமை படைத்தவர்கள் தான் தனியாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை யாவரும் அறிவோம். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, மனதில் இருக்கும் மற்ற கஷ்டத்தையும், கவலையையும் பின்னுக்கு தள்ளி, எப்போதும் மனஅமைதியை பெற்றிடுவோம்.

Friday 24 December 2010

மன அமைதியும் சந்தோஸத்தயும் உருவாக்குவோம்

ஸர்ப் எக்ஸ்செல் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ரோசி மிஸ் ஏன் வரல. அவங்க நாய்குட்டி செத்து போயிடுச்சாம். அதை கேட்ட மாணவன் ரோசி மிஸ் வீட்டுக்கு வருவான். அவர் சோகமாக இருப்பதாய் பார்த்து எப்படியாவது அவரைசந்தோஷ படுத்த முயல்வான். நாய் போல நடித்து காட்டுவான். அவனுடைய வெண்மையான உடை கரை படியும். ஆனாலும் அவன் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் ரோசி மிஸ்சை சந்தோஷ படுத்துவதில் கவனமாய் இருப்பான். பார்க்கும் போதே எவளவு இனிமை. அனுபவித்தால் எப்படி இருக்கும்.

இப்படியாக நாம் ஒவருவரும் மற்றவருக்காக தான் வாழ்கிறோம். வாழ்வது ஒரு வாழ்கை. எப்படியும் சாக போகிறோம். தவறு என்றாலும் கூட கடிந்து கொள்வதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. அன்பால் மட்டுமே மாற்றத்தை காண முடியும். முடிந்தவரை அன்பை கட்டுவோம். முடியாத போது அன்பை வேறு விதமாக காட்டுவோம். எந்த வித சுழலிலும் மற்றவர்களிடையே சந்தோசத்தை உருவாக்க முடியும் நீங்கள் நினைத்தால். உறுதி எடுப்போம் அமைதியை வாழ.

மன அமைதிக்கு குடும்பத்தின் பங்கு

ஒரு மனிதனுக்கு அவன் குடும்பம் மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களின் ஒரேஒரு கடமை இக்கட்டான சுழலில் ஆறுதலான வார்த்தைகளை சொல்வதும் அரவணைப்பது மட்டுமே. புத்தகத்தில் இருந்து அறிவும், மீடியாவில் இருந்து செய்தியும், வலைத்தளத்திலோ என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் கிடைக்கும். இப்படி இருக்க குடும்பம் எனபது மட்டுமே அன்பை கொடுத்து ஆனந்தத்தை உருவாக்கும் இடமாக இருக்க முடியும். என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள் அவள் அண்ணனை பற்றி. அவன் நிறைய படிபபானாம். அவளிடம் எதாவது பேசுவது என்றால் அவனுக்கு தெரிந்த அறிவியல் கோட்பாடுகள் பற்றித்தான் பேசுவான். இவள் இதைபற்றி ஒருபுறம் பெருமையாக சொன்னாலும் மறுபுறமோ அவனின் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது. குடும்ப நபர் ஓவருவரின் எதிர்பார்ப்பையும் ஒருத்தரால் நிறைவு செய்ய முடியாது. அதற்காக அவர்களை வெறுத்து விட்டால் அதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது. குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தேவை படுவது அன்பு ஆதரவு மற்றும் மனதுக்கு அமைதி. இதை திருப்தியாக தந்தால் எப்பேர்பட்ட குழந்தையும் படிப்பில் சிறந்தவராக முடியும். இது குழந்தைக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும். அதை விட்டு அட்வைஸ் பண்ணுவதும், அதை படி இதை படி என்று கஷ்ட்டம் செய்வதும் கம்பேர் பண்ணுவதும் ஒருவரின் மன அமைதியை கெடுக்குமே தவிர பெரிய மாற்றத்தை கொடுக்காது



இனிமையான வார்த்தைகளால் குடும்ப நபரை பாராட்டி, அவர்களுடைய நல்லதை எடுத்து சொல்லி மகிழ்வூட்டி , அவர்களோடும் குடும்பத்தார் அனைவரோடும் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ்வோம் . வெற்றிகளும் சாதனைகளும் தானே தேடி வரும்.