Monday 6 June 2011

சலனமில்லாத மனது அதில் இருக்கும் அமைதி

நாம் ஒவருவரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் என்றாவது ஒரு தடவை ஒரு வித அமைதி நம் மனதில் இருப்பதை உணர்வோம். அந்த அமைதி க்கு என்று சில காரணங்கள் இருக்கும், அதை கண்டுபிடித்தால் நாம் என்றுமே மன அமைதி மற்றும் மன நிறைவுடன் இருப்பதற்கான வழியை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியை கற்று கொடுப்பதில் ஆர்வம் உடையவர். அவர் சொல்வார், என் சந்தோசமும் மன அமைதியும் அவர்களுக்கு கற்றுகொடுக்கும் போது என்னால் உணரமுடிகிறது.

இப்படியாக நமக்கு எதை செய்தால் சந்தோசம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தல் முக்கியம்.

உங்களை உங்களுக்கு பிடிக்க வேண்டும், அப்பொழுது நம்மால் என்ன முடியுமோ அது நம்மை எவளவு சந்தோசம் படுத்துமோ என்று தெரிந்து அதில் ஈடுபட்டால் மன அமைதி யும் சந்தோசமும் நம்முடன் என்றுமே இருப்பதாய் உணரலாம்

No comments:

Post a Comment